Home

Sengunthar God

செங்குந்தர் உறுதி மொழி

 நாம் செங்குந்த குலக்கடவுள் அருள்மிகு முருகப்பெருமான் ஆணையாக, மனசாட்சியுடன் கீழ்கண்டவாறு உறுதி பூணுகிறோம்.

1. நாம், இந்தியக் குடிமக்களாய் இருப்பதை, பெருமையாகக் கருதுகிறோம். நமது நாட்டின் அரசியல் அமைப்புச் சட்ட திட்டங்களுக்குக் கட்டுப்பட்டு, நாட்டின் ஒற்றுமைக்கும் முன்னேற்றத்திற்கும் பாடுபடுவோம்.

2. நாம், செங்குந்தர் என்ற உணர்வுடன் ஒன்றுபட்டு, நமது சங்கத்தின் சட்ட திட்டங்களுக்குக் கட்டுபட்டு சமூக,     பொருளாதார, கல்வி, தொழில், கலாச்சார முன்னேற்றத்திற்குப் பாடுபடுவோம்; சமூக நலம் காப்போம்.

3. நாம், மற்ற இனத்தவரிடம், மனித நேயம் கொண்டு, நட்புடனும், அன்புடனும் பழகுவோம்.

4. நாம், நமது உரிமைகளைப் பாதுகாக்க எப்பொழுதும் விழிப்புடன் செயல்படுவோம்,

5. நாம், நமது சங்கம் நிறுவிய சான்றோர்களை நினைவில் கொண்டு, சங்கத்தை நாளும் வளர்த்திடுவோம்.

 

வாழ்க! வாழ்க! செங்குந்தர்! வெல்க! வெல்க! செங்குந்தர்!